சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?

பதிவேற்றம் செய்த நாள் February 6, 2023   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டா?

ஒரு சொந்த வீட்டில் வாழ்வதென்பது மிக மிக தனி மகிழ்ச்சியை உண்டாகும். ஒரு எலி வலை என்றாலும் ஒரு தனி வலை வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.

ஆனால் நமக்கு ஒரு சொந்த வீடு இருப்பது ஒரு மனநிறைவை தரக்கூடியதுதான். ஆனால் நம் சூழ்நிலை கராணத்தினால் சொந்த வீடு என்பது எட்டா கனியாக இருக்கிறது.

சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு

சொந்த வீடு அமைய :

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா?

ஒரு சொந்த வீடு வாங்குவதற்கு வசதிகள் இருந்தால் போதாது ஜாதகத்தின் படி நீங்கள் சொந்த வீடு வாங்கவதற்கு யோகம் இருக்க வேண்டும்.

நீீீங்கள் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றாலும் அல்லது சொந்த வீடு தனி ஒருவருக்கு நிலைக்க இருக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்கு ஜாதகத்தின் படி செவ்வாய் கிரகம் வலுவான முறையில் இருக்க வேண்டும்.

ஒரு சிலர் மூதாதையர் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகங்களை பெறுகிறார்கள்.

ஒரு சிலர் சிறுக சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டில் அதிபதியாகவும் வாழ்கிறார்கள்.

பரிகாரங்கள் :

நிலம் அமைவதற்கும், வீடு அமைவதற்கும் தாமதமாக ஆகும்போது ஒரு முறையாவது ‘திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை” வணங்கவும்.

“ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை உச்சரித்தும், ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கவும், அந்தக் கடல் நீரையும் எடுத்து வந்து மஞ்சளை கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி அதை தெளிக்க வேண்டும்.

சொந்த வீடு அமையாமலும், நிலங்கள் கிடைக்காதவர்களும், சொந்த வீடு அமைவதே கஷ்டம் என்று நினைபவர்கள் ஒரு முறையாவது “சிறுவாபுரி முருகனை” ஒன்பது செவ்வாயன்று வணங்கி வந்தால் வீடு கட்டும் கனவு நினைவாகும்.

நிலங்கள், வீடுகள் வாங்கும் யோகம் அமைவதற்கு பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட வேண்டும்.

இங்கே படிக்க: இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்!

வீடுகள், வாசல்கள் இல்லாமல் தெருவில் அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுத்து வந்தால் நீங்கள் நிச்சயமாக வீடு வாங்குவீர்கள்.

ராமன் நாமத்தையும் செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயத்தில் அமைக்கக் கொடுத்தால் வீடுகள் வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகங்கள்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares